தொழில்நுட்ப கல்வித்துறையின் அனுமதியின்றி கோவையில் செயல்பட்டு வரும் அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அக்கல்லூரியின் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முன்னதாக, அந்நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாந்ததாகவும், படித்து முடிந்த பின்னர் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், பணம் செலுத்திய பின்னரும் கல்விச் சான்றிதழை அமிர்தா இண்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வழங்கவில்லை எனவும், இதனை பெற்றுத்தரவும், செலுத்திய பணத்தை திரும்பப் பெற்றுத்தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக, அந்நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாந்ததாகவும், படித்து முடிந்த பின்னர் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், பணம் செலுத்திய பின்னரும் கல்விச் சான்றிதழை அமிர்தா இண்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வழங்கவில்லை எனவும், இதனை பெற்றுத்தரவும், செலுத்திய பணத்தை திரும்பப் பெற்றுத்தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.