மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த சாலையின் ஓரத்தில் விசப்பட்ட 300 மதுபான பாட்டில்கள் மற்றும் பல நூறு கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றினர்.



மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலையானது நீலகிரிக்கு இடையூறின்றி செல்லும் சாலை ஆகும். மேலும், போக்குவரத்து நெரிசல் குறைந்த இந்தச் சாலையினை ஒருசில பயணிகளே பயன்படுத்தி வரும் நிலையில், ஒருசிலர் அந்த சாலையில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை சாலையின் ஓரத்தில் வீசிச்செல்கின்றனர். மேலும், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றையும் சாலையில் வீசிச் செல்கின்றனர். 



இந்தச் சாலை வனப்பகுதிக்கு உட்பட்ட சாலை மற்றும் யானைகள் வழித்தடப் பாதையாகும். இதனால் சாலையில் வீசப்படும் மதுபாட்டில்கள் உடைந்து யானைகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் வைல்டு லைஃப் நேட்சர் கன்சர்வேசன் டிரஸ்ட், ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள், ஷெட்எஃப் வின்டு பவர் தனியார் நிறுவன ஊழியர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் வனத்துறையுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



இந்த தூய்மைப் பணியின் போது மேட்டுப்பாளையம்- கோத்தகிரிக்கு உட்பட்ட சாலையில் 300 மதுபான பாட்டில்களும், 300 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும் சேகரிக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வனப்பகுதியில் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தவிர்க்க வேண்டும். அப்போதே வளமான பசுமையும், வன விலங்குகளும் காக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...