ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; கோவையில் இருவர் கைது

கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்புலன்ஸை சோதனையிட்டதில் அதில் மறைத்து கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.


கோவை: ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் இருவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரச்சின்னமருது (28) என போலீசார் தெரிவித்தனர்.

ரகசிய தகவலின் பேரில், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் சென்ற டாடா விங்கர் ஆம்புலன்ஸை சோதனையிட்டபோது, வாகனத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆந்திரப் பிரதேசத்தின் இச்சாபுரத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி, கோவையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், ஆம்புலன்ஸில் கஞ்சாவை கடத்தினால் வழக்கமான போலீஸ் சோதனைகள் மற்றும் சுங்கச்சாவடி கண்காணிப்பில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என கருதி இந்த முறையை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற முறையில் ஏற்கனவே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா, இந்த கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...