அப்போது இருந்து இப்போது வரை அப்படியே இருக்கும் புரூக்பாண்ட் மேம்பாலம்!

கோவை மாவட்டம் நஞ்சப்பா சாலை அடுத்து அமைந்துள்ள புரூக்பாண்ட் சாலை மேம்பாலமானது மிகவும் பிரசிதிபெற்ற போக்குவரத்து நெரிசல் நிறைந்த மேம்பாலமாகும். ஆர்.எஸ்.புரம், நஞ்சப்பா சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராம்நகர், அவிநாசி சாலை, உக்கடம் பகுதியை இணைக்கும் இப்பாளத்தினை நாள்தோறும் ஆயிரக் கணக்காகோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் அவ்வப்போது பெய்துவரும் மழையின் காரணமாக புரூக்பாண்ட் பாலத்தின் கீழ் வழித்தடத்தில் மழை நீரும், சாக்கடை நீரும் தேங்கி வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையே நீடித்து வருகிறது.



இந்த வழித்தடத்தில் கார்களும், இருசக்கர வாகனங்களும் செல்லும் நிலையில், வாகனங்கள் வேகமாக செல்வதால் மழை நீருடன் கலந்த சாக்கடை நீர் வாகன ஓட்டிகள் மீது தெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.



இதனிடையே, இன்னும் ஒரு சில மாதங்களில் பருவ மழை பெய்யவுள்ளதால் புரூக்பாண்ட் மேம்பாலத்தின் கீழ் வழித்தடத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், எனது சிறு வயது காலம் முதலே புரூக்பாண்ட் மேம்பாலத்தின் அவினாசி சாலை செல்லும் கீழ் வழித்தடத்தில் மழைக்காலங்களில் இந்த நிலையே நீடித்து வருகிறது. ஒரு சில நேரங்களில் வாகன ஓட்டிகளே மூழ்கிவிடும் அளவிற்கு மழை நீர் இங்கு தேங்கி நிற்கும். 



மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு முறை கனமழை பெய்யும்போது இயந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைப்பர். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...