முதல் தலைமுறை தொழில் முனைவோர் புதிய தொழில்கள் துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவி- கோவை ஆட்சியர்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நீட்ஸ் திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் 2017-18ம் நிதியாண்டில் தொழில் துவங்க முன்வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இத்திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தொழில் திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத்தரப்படும். இத்திட்டத்தினை மாவட்ட தொழில் மையமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இணைந்து செயல்படுத்துகின்றன.

இத்திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத்தொழில்களை துவங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீதம் மானியமும், 3 சதவீதம் பின்முறை வட்டி மானியமும் வழங்குகிறது.

புதியதாக துவங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். அரசு திட்டங்களின்கீழ் ஏற்கனவே, மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று திருப்பி செலுத்தாதவராக இருத்தல் கூடாது.

இத்திட்டத்தின் அரசாணை, விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட தொழில் மையத்தின் www.dickovai.com என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்ட பயனாளிகள், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத மேலாண் பயிற்சி ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் 2016-17 கடந்த நிதியாண்டில் 83 நபர்களுக்கு ரூ.14 கோடியே 38 லட்சத்து மானியத்துடன் கூடிய ரூ.45 கோடியே 61 லட்சத்து கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. தென்னை நார் கழிவுக் கட்டிகள், மசாலா பவுடர், காலணி, உணவு எண்ணெய், அட்டை பெட்டிகள், ஆயுத்த ஆடை, சாக்லேட், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், சி.என்.சி, லேத், ஷீட் மெட்டல் பேப்ரிகேசன், பிளாஸ்டிக் இன்ஜக்ஷன் மோல்டிங், பெட் பாட்டில், பெயிண்ட், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பி.வி.சி. பைப், பிவிசி கதவு மற்றும் ஜன்னல்கள், செல்லோ டேப், தோல் பொருட்கள் போன்ற உற்பத்தி தொழில்கள் மற்றும் அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், இயன்முறை மருத்துவம், கேட்டரிங் சர்வீஸ், நான் டெஸ்ட்ராக்டிவ் டெஸ்டிங் உள்ளிட்ட சேவைத் தொழில்களும் இத்திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டு 2017-18ம் கோவை மாவட்டத்திற்கு ரூ.480 லட்சம் மானியத் தொகை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தகுதியும், ஆர்வமும் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து  பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...