கோவை அரசு மருத்துவமனை சி.டி.ஸ்டேன்டு அருகே கடந்த மார்ச் 24ம் தேதியன்று பிறந்து ஒரு சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கேட்பாறின்றி கீழே கிடந்துள்ளது. அக்குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்ட மருத்துவமனை காவலாளி அந்தக் குழந்தையை மிட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சேர்த்தார்.
அப்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு 1.6 கிலோ எடை இருந்த அந்த பெண் குழந்தை மருத்துவர்களின் தொடர் பராமரிப்பின் காரணமாக 2 கிலோ எடை கூடியது.
இதனைத்தொடர்ந்து, அந்தக் குழந்தையினை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க முடிவுசெய்த மருத்துவர்கள் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் சரணாலயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.
இந்தக் குழந்தையினை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல், சரணாலயம் இல்ல அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
அப்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு 1.6 கிலோ எடை இருந்த அந்த பெண் குழந்தை மருத்துவர்களின் தொடர் பராமரிப்பின் காரணமாக 2 கிலோ எடை கூடியது.
இதனைத்தொடர்ந்து, அந்தக் குழந்தையினை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க முடிவுசெய்த மருத்துவர்கள் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் சரணாலயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.
இந்தக் குழந்தையினை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல், சரணாலயம் இல்ல அதிகாரியிடம் ஒப்படைத்தார்.