பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படும் உதவி காவல் ஆய்வாளர் ஜான்சன், அந்த பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளுமாறு தலைமை காவலர் மூலம் பேசிய ஆடியோ வெளியாகி வைரலான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சன், ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக வெளியான ஆடியோ பதிவு தொடர்பான புகாரின் எதிரொலியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளத்தொடர்பு தொடர்பான புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த முகேஷ் என்பவரிடம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் பணம் பெற்றது காவல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்ததால், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்காக, தலைமை காவலர் நாகராஜன் மூலம் முகேஷை தொடர்புகொண்டு, பெற்ற பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு நாகராஜன் வலியுறுத்துவதும், தனக்கு பணம் தேவையில்லை, வழக்கில் இருந்து தன்னை விடுவித்தால் போதும் என்று முகேஷ் கூறுவதும் என இருவரும் மாறி மாறி பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் ஜான்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிரபுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக காவல்துறையின் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கள்ளத்தொடர்பு தொடர்பான புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த முகேஷ் என்பவரிடம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் பணம் பெற்றது காவல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்ததால், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்காக, தலைமை காவலர் நாகராஜன் மூலம் முகேஷை தொடர்புகொண்டு, பெற்ற பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு நாகராஜன் வலியுறுத்துவதும், தனக்கு பணம் தேவையில்லை, வழக்கில் இருந்து தன்னை விடுவித்தால் போதும் என்று முகேஷ் கூறுவதும் என இருவரும் மாறி மாறி பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் ஜான்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிரபுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக காவல்துறையின் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.