வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24.63 லட்சம் வசூலிக்கப்பட்டது. மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் கடைகளை நடத்தி வந்த வாடகைதாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 10 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.




மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாக கடைகளில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த வாடகைதாரர்களுக்கு நிலுவை தொகை செலுத்த கோரி மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் சென்று தெரிவித்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து, நிர்வாகம் இந்த கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.




மேற்கு மண்டலம் வார்டு எண்.71-க்குட்பட்ட DB Road-ல் 1 கடை, ஆரோக்கியசாமி ரோட்டில் 3 கடைகள், டி.வி.சாமி ரோட்டில் 1 கடை, வார்டு எண்.73-க்குட்பட்ட சுப்ரி வீதியில் 1 கடை என மேற்கு மண்டலத்தில் மொத்தம் 6 கடைகள் சீல் வைக்கப்பட்டன. வடக்கு மண்டலம் வார்டு எண்.2-க்குட்பட்ட துடியலூரில் 2 மட்டன் ஸ்டால்கள் பூட்டப்பட்டன.




தெற்கு மண்டலம் வார்டு எண்.96-க்குட்பட்ட தக்காளி மார்க்கெட்டில் 2 கடைகள் சீல் வைக்கப்பட்டன. இவ்வாறு மூன்று மண்டலங்களில் மொத்தம் 10 மாநகராட்சி வணிக வளாக கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.




இந்த 10 கடைகளின் மொத்த வாடகை நிலுவைத் தொகை ரூ.54,38,988 ஆகும். மேற்கண்ட நடவடிக்கையின் மூலம் இதுவரை ரூ.24,63,577 வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மாநகராட்சி வணிக வளாகங்களில் கடை நடத்தும் வாடகைதாரர்கள் சரியான நேரத்தில் வாடகை செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் இதுபோன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...