மகளிர் வழக்குகளை கையாளுவது மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் மகளிர் வழக்குகளை கையாளுவது மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் செயலாளர் ரேகாசர்மா தலைமையில் பெண்களுக்கு எதிரான வழக்குகளை இந்தியா முழுவதும் காவல்துறை எப்படி கையாள்கிறது எனவும், வழக்குகள் உடனே பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

இந்த கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான வழக்குகள், வரதட்சணை பிரச்சனைகள், பெண்கள் பணியிடங்களில் தாக்கப்படுதல், பொது இடங்களில் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் புகார்களுக்கு காவல்துறை உடனே வழக்கினை பதிவு செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதலுதவி மற்றும் சட்ட ரீதியான உதவிகளை செய்வது குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற சூழ்நிலை  உருவாகியுள்ள நிலையில் நிர்பயா வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை பெண்கள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் நடத்தும் இந்த கூட்டத்தின் மூலமாக காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கும் 40 வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...