அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் - காவல் ஆய்வாளர் தென்னரசு வேண்டுகோள்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் முழுநிலவு விழிப்புணர்வுக் கூட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாய்க்கனூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு பயிற்சி மைய தன்னார்வலர் பயிற்றுனர் பத்மாவதி அனைவரையும் வரவேற்றார். கோடாங்கி பட்டி ஊராட்சி பொறியாளர் முத்துக்குமரன் வாழ்த்துரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆழியார் துணை காவல் ஆய்வாளர்கள் டி.தென்னரசு, சின்னசாமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பின், ஆழியார் துணை காவல் ஆய்வாளர் டி.தென்னரசு பேசும் போது, கிராமப்புறங்களில் குழந்தைகள் சரிவர படிக்கவில்லை என்றால் வீட்டு வேலைகளுக்கு,  தோட்டம், பன்னையத்து வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதன் காரணமாக குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.

கல்வி அறிவு பெறாத குழந்தைகள் பெற்றோர்கள் செய்யும் தொழிலையே செய்யக் கூடிய சூழல் உருவாகிறது. இதன் காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெற்றோர்கள் குடும்ப சூழலை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதால் ஒரு தலை முறையை மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன், களப் பணியாளர் சரோஜா உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நிகழ்ச்சி மேலாளர் ஜே.இ.பீஜீ அலெக்ஸ் நன்றி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...