வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...