தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய நான்கு மாநிலங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 690 சதுர கிலோமீட்டர் கொண்ட கோவை வனக்கோட்டத்தை 24 பகுதிகளாக பிரித்து இக்கணக்கெடுப்பு நடத்தப்படுமென மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 4 மாநிலங்களிலும் நாளை துவங்கிறது.
நாளை முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் வனக்கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில், யானைகள் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
அப்போது மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் யானைகள் கணக்கெடுப்பை மேற்கொள்வது குறித்து வனத்துறையினருக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கும் பயிற்சி அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராமசுப்பிரமணியம், 690 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோவை வனக்கோட்டத்தை 24 பகுதிகளாக பிரித்து யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுமென தெரிவித்தார். முதல் நாளில் நேரடி கணக்கெடுப்பு, இரண்டாம் நாள் அறிவியல் பூர்வ கணக்கெடுப்பு, மூன்றாம் நாள் நீர்நிலை கண்காணிப்பு என 3 முறைகளில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம் யானைகளின் குடும்ப அமைப்பு, ஆண், பெண் யானைகள் விகிதாச்சாரம், குட்டி யானைகள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமெனவும், பயிற்சி வனவர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உட்பட சுமார் 100 பேர் பங்கேற்க உள்ளதாகவும் ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.
பருவ காலங்களுக்கு ஏற்ப யானைகள் இடம் பெயரும் தன்மை கொண்டதால் ஒரே நாளில் 4 மாநிலங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், இக்கணக்கெடுப்பு மூலம் யானைகளின் துல்லியமான கணக்கை அறிந்து கொள்ள முடியுமெனவும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 4 மாநிலங்களிலும் நாளை துவங்கிறது.
நாளை முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் வனக்கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில், யானைகள் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
அப்போது மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் யானைகள் கணக்கெடுப்பை மேற்கொள்வது குறித்து வனத்துறையினருக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கும் பயிற்சி அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராமசுப்பிரமணியம், 690 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோவை வனக்கோட்டத்தை 24 பகுதிகளாக பிரித்து யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுமென தெரிவித்தார். முதல் நாளில் நேரடி கணக்கெடுப்பு, இரண்டாம் நாள் அறிவியல் பூர்வ கணக்கெடுப்பு, மூன்றாம் நாள் நீர்நிலை கண்காணிப்பு என 3 முறைகளில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம் யானைகளின் குடும்ப அமைப்பு, ஆண், பெண் யானைகள் விகிதாச்சாரம், குட்டி யானைகள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமெனவும், பயிற்சி வனவர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உட்பட சுமார் 100 பேர் பங்கேற்க உள்ளதாகவும் ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.
பருவ காலங்களுக்கு ஏற்ப யானைகள் இடம் பெயரும் தன்மை கொண்டதால் ஒரே நாளில் 4 மாநிலங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், இக்கணக்கெடுப்பு மூலம் யானைகளின் துல்லியமான கணக்கை அறிந்து கொள்ள முடியுமெனவும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் தெரிவித்தார்.