இலவச கல்வி திட்டத்தை வெளி மாநில, பிற மாவட்ட பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு கூட்டம் அங்கேரிபாளையம் அருகில் ஆத்துப்பாளையத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவரையும் சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரை வரவேற்றார். முன்னாள் வார்டு உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

அங்கன்வாடி ஆசிரியர்கள் எம்.கமல சரஸ்வதி, எஸ்.பிரியா, ஆத்துப்பாளையம் ஊர்த்தலைவர் கே.குருசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன் பேசும் போது, திருப்பூர் மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் திருப்பூருக்கு வசிக்க வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் அவர்களுடைய குழந்தைகளை முறையாக பள்ளிகளில் சேர்ப்பது இல்லை. சிறிது காலத்திற்கு பிறகு குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புகிறார்கள்.

இதை தடுத்து நிறுத்தி அவ்வாறு வேலைக்கு செல்லும் குழந்தைகளை சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து இலவச கல்வி அளிக்கும் பணியை தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் செய்து வருகிறோம்.

பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேலைக்கு செல்லும் குழந்தைகளை பற்றி 0422 - 2305445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அந்த குழந்தைகளை மீட்டு வந்து கல்வி அளிப்பதோடு குழந்தைகளை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழிற்கல்வி பயிற்றுனர் மீனா, தன்னார்வலர் பயிற்றுனர் சுப்புலட்சுமி உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முன்னாள் வார்டு கவுன்சிலர் எஸ்.செந்தில்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...