கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஆதார் அட்டை, அதன் நகல் மற்றும் ரூ.10,000 முன்பணத்துடன் பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும்.
கோவை: கோவை மாவட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் கைப்பற்றப்பட்டு, சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
காவல்துறையினர் தெரிவித்ததாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 102 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 106(2)-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள், புலனாய்வு மற்றும் அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, ஏலக்குழு அதிகாரிகள் முன்னிலையில், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு, அவிநாசி சாலையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், ஏலத்திற்கு முன்பாக பிஆர்எஸ் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளலாம்.
ஏலத்தில் பங்கேற்பதற்காக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல், அசல் ஆதார் அட்டை, அதன் நகல் மற்றும் ரூ.10,000 திருப்பி வழங்கப்படும் முன்பணத்துடன் பிஆர்எஸ் மைதானத்தில் பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
ஏலத்தில் வெற்றி பெறும் நபர்கள், ஏலத் தொகையுடன் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியையும் (GST) அன்றைய தினமே முழுமையாக செலுத்தி, வாகனங்களை பெற்றுச் செல்லலாம் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் தெரிவித்ததாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 102 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 106(2)-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள், புலனாய்வு மற்றும் அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, ஏலக்குழு அதிகாரிகள் முன்னிலையில், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு, அவிநாசி சாலையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், ஏலத்திற்கு முன்பாக பிஆர்எஸ் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளலாம்.
ஏலத்தில் பங்கேற்பதற்காக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல், அசல் ஆதார் அட்டை, அதன் நகல் மற்றும் ரூ.10,000 திருப்பி வழங்கப்படும் முன்பணத்துடன் பிஆர்எஸ் மைதானத்தில் பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
ஏலத்தில் வெற்றி பெறும் நபர்கள், ஏலத் தொகையுடன் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியையும் (GST) அன்றைய தினமே முழுமையாக செலுத்தி, வாகனங்களை பெற்றுச் செல்லலாம் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.