ஆசிய அளவில் யோகாவில் இரு தங்கப் பதக்கம் வென்ற பார்க் பள்ளி மாணவி வைஷ்ணவி

பார்க் குளோபல் பள்ளி மாணவி வைஷ்ணவி தாய்லாந்தில் ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் இரு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்ததற்கு கோவையில் உள்ள கேரளா கிளப்-யில் பாராட்டு விழா நடைபெற்றது.

தாய்லாந்தில் மே 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.



இதில், இந்தியாவில் இருந்து 15 மாணவர்கள் ஜூனியர் நிலையில் கலந்து கொண்டு தங்களது யோகா திறமையினை வெளிப்படுத்தினர். இதில், பார்க் குளோபல் பள்ளி மாணவி வைஷ்ணவி முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்றதோடு, ஒட்டுமொத்த முதல் பரிசாக சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.

மாணவி வைஷ்ணவி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், தேசிய, மாவட்ட அளவில் 200-க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். சர்வதேச அளவில் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.



இவருக்கு "யோகா ராணி", "யோகா நட்சத்திரா" போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர "இளம் சாதனையாளர் விருது", "யோகா கலைமாமணி" விருதுகளையும் பெற்றுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளிலும் இவரது யோகா செயல்திறன் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

கடந்த 2016 செப்டம்பர் 26ம் தேதியன்று நடைபெற்ற 3-வது காண்வெல்த் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இவர், 30 நிமிடங்களில் 596 ஆசனங்களையும், ஒரு நிமிடத்தில் 47 ஆசனங்களையும் செய்து இந்திய சாதனை புத்தகத்திலும், ஒரு நிமிடத்தில் 64 ஆசனங்களை செய்து ஆசிய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

மாணவி வைஷ்ணவி, இதுகுறித்து பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், இவரது இலக்கு கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதாக கூறினார். மேலும், இவரது வெற்றிக்கு பள்ளியில் அளிக்கப்பட்ட தனித்துவமான முக்கியத்துவமே காரணம் என்றும், பார்க் குளோபல் பள்ளி என்றுமே மறைந்திருக்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர தவறியதில்லை எனவும் கூறினார்.



மேலும், தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, இவருக்கு இலவச கல்வி, ஜிம்னாஷ்டிக் பயிற்சிக்கு உதவி அளிப்பதாகவும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு உதவிவருவதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, பார்க் குளோபல் பள்ளியின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி வைஷ்ணவியை பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அனைவரும் யோகா பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ அறிவுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...