தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேக்கா ஷர்மா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கோவையில் தேசிய மகளிர் ஆணையம் சார்பாக "மகிளா ஜன சன்வை" என்ற பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு நேற்றும் இன்றும் விசாரணை நடைபெற்றது. இதில் 40 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 90 சதவிகித வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், சிலவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு, அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரு காவல்துறையினர் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கெளரவ கொலை தொடர்பான புகார் அதிகளவுகள் ஹரியானாவில் இருந்து வருகிறது. தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு காவல்துறை முறையாக பதில் அளிப்பது இல்லை.
சாமளாபுரம் மதுக்கடையினை மூடக்கோரி நடைபெற்ற போராட்டதில் பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக இது வரை தங்கள் ஆணையத்திற்கு புகார் வரவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், கோவையில் தேசிய மகளிர் ஆணையம் சார்பாக "மகிளா ஜன சன்வை" என்ற பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு நேற்றும் இன்றும் விசாரணை நடைபெற்றது. இதில் 40 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 90 சதவிகித வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், சிலவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு, அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரு காவல்துறையினர் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கெளரவ கொலை தொடர்பான புகார் அதிகளவுகள் ஹரியானாவில் இருந்து வருகிறது. தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு காவல்துறை முறையாக பதில் அளிப்பது இல்லை.
சாமளாபுரம் மதுக்கடையினை மூடக்கோரி நடைபெற்ற போராட்டதில் பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக இது வரை தங்கள் ஆணையத்திற்கு புகார் வரவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.