திருப்பூரில் பெண்ணை தாக்கிய டி.எஸ்.பி. மீது எந்த புகாரும் வரவில்லை- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேகா ஷர்மா பேட்டி



தேசிய மகளிர் ஆணையத்தின் 'மகிளா ஜென் சுன்வைவ்' அமைப்பு நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த அமைப்பு நடத்தும் விசாரணை இரண்டு நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. இதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ரேகா ஷர்மா கோவை வந்தார். அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 5 மாதங்களாக 'மகிளா ஜன் சுன்வைவ்' அமைப்பானது பெண்களுக்கான வழக்குகளை விசாரிக்க இந்தியா முழுவதும் மாவட்டம் வாரியாக சென்று விசாரணை நடத்துகிறது. போலீசாரால் தீா்க்க முடியாத வழக்குகளை மகிளா ஜன் சுன்வைவ் அமைப்பு ஏற்று நடத்தி வருகிறது.

மேலும், வடமாநிலங்கள் உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் குற்ற எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் குற்ற எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தமிழக போலீசார் எங்கள் அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் விசாரணை மேற்கொண்டோம். அப்போது அங்கு 100 வழக்குகள் பதிவாகி இருந்தது. கோவையில் 40 வழக்குகள் மட்டுமே உள்ளது. 90 சதவிகித வழக்கு விசாரணை முடிவடைந்துவிட்டது.

இங்கு ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இதற்கு அண்டை மாவட்டத்தை சேர்ந்த 2 இடைநிலை காவலர்கள் உறுதுணையாக இருந்தனர். தொடர்ந்து, எங்கள் அமைப்பின் சார்பில் அவர்கள் மீதும் விசாரணை எடுக்க கமிஷன் அமைத்துள்ளோம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ள பெண்கள் புகார்களை அளிக்க முன்வர வேண்டும். திருப்பூரில் பெண்ணை தாக்கியதாக டி.எஸ்.பி. மீது எந்த புகாரும் எங்கள் அமைப்புக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...