கோவை மாநகராட்சி சார்பில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து, இன்று வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. சில சாலை ஓரக் பூக்கடைகளில் பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்தாமல், வாழை இலை மூலம் பூக்களைக்கட்டி வியாபாரம் செய்தனர்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இருந்தனர்.

அதனை தொடர்ந்து, இன்று வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. சில சாலை ஓரக் பூக்கடைகளில் பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்தாமல், வாழை இலை மூலம் பூக்களைக்கட்டி வியாபாரம் செய்தனர்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இருந்தனர்.
