கோவை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களது வாழ்நாள் சான்று சமர்பிக்காதவர்கள் வருகின்ற மே 25ம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவத்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களது வாழ்நாள் சான்று ஏப்ரல் மாதம் 2017 முதல் பெறப்பட்டு வருகிறது. இதில் 321 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இது நாள் வரை வாழ்நாள் சான்று சமர்பிக்கவில்லை.
எனவே, வாழ்நாள் சான்று சமர்பிக்காத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வருகின்ற மே 25ம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்குமாறும் அவ்வாறு வாழ்நாள் சான்று சமர்பிக்காத ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 2017 மே மாதம் முதல் மறு அறிவிப்பு ஏதுமின்றி நிறுத்தம் செய்யப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களது வாழ்நாள் சான்று ஏப்ரல் மாதம் 2017 முதல் பெறப்பட்டு வருகிறது. இதில் 321 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இது நாள் வரை வாழ்நாள் சான்று சமர்பிக்கவில்லை.
எனவே, வாழ்நாள் சான்று சமர்பிக்காத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வருகின்ற மே 25ம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்குமாறும் அவ்வாறு வாழ்நாள் சான்று சமர்பிக்காத ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 2017 மே மாதம் முதல் மறு அறிவிப்பு ஏதுமின்றி நிறுத்தம் செய்யப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.