நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் குறித்த நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சி தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு 1 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் வீதம் 32 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 23 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நீங்கலாக 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் குறித்த நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 32 ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டிட கட்டுமான பணிகள் ஒவ்வொரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களாக நடைபெற்று வரும் கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், புதிதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுதல் பணிகள் போன்ற கட்டிட கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் குறித்த வாராந்திர அறிக்கையை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் கருத்துகளை கேட்டு அதற்கேற்றார்போல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மண்டலம் 1க்கு ஒரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதை அடுத்து 5 மண்டலத்திற்கு தலா 1 மையம் வீதம் தரம் உயர்த்த ரூ.15 லட்சம் முதற்கட்டமாக வரப்பெற்றுள்ளது. இந்த நிதியினை பயன்படுத்தி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான ஆயத்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...