கடந்த 2009-ம் ஆண்டு மே 17-ம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஏற்பாடு செய்தனர்.

நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தபெதிக-வின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார். தொடர்ந்து, உயிரிழந்த தமிழ் மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.