குடியிருப்பு வாசிகள் குப்பைகளில் இருந்து பையோகேஸ் தயாரிக்க கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்- மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில்  100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து சேகரம் செய்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 4,041 நகரங்களின் 100 சதவிகிதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 100 சதவீதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய தேவையான விரிவான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை குடியிருப்பு வாசிகள் தரம் பிரித்து தங்கள் சொந்த பொறுப்பில் அவர்களுடைய வளாகத்திலேயே மக்கும் குப்பைகளை பையோகேஸ் அல்லது உரம் தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், மறுசுழற்ச்சிக்கு ஏதுவான பிற கழிவுகளை தனி நபருக்கு விற்பனை செய்யவோ அல்லது மாநகராட்சியிலும் ஒப்படைக்கலாம்.

மேலும், இதர குடியிருப்புகளில் மாநகராட்சி மூலம் 2,087 குப்பை சேகரிக்கும் தள்ளு வண்டிகள் மூலம் தரம் பிரித்த குப்பைகளை சேகரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...