தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது சமவெளிப் பகுதியைச் சார்ந்தவர்களே.
கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் சமவெளிப்பகுதிகளில் சில மாதங்களாக மழை பொய்த்துப்போய் இருந்ததாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைபிரதேச பகுதிகளில் பெய்யும் மழை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.
கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்ததால் வால்பாறையில் உள்ள அனைத்து ஆறுகளும் வறண்டு காணப்பட்டன. வறட்சியின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வால்பாறையில் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முதல் வால்பாறைக்குட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வால்பாறை சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் மட்டுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள சோலையாறு, சின்னக்கல்லார், நீரார் உள்ளிட்ட அணைகள் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் சமவெளிப்பகுதிகளில் சில மாதங்களாக மழை பொய்த்துப்போய் இருந்ததாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைபிரதேச பகுதிகளில் பெய்யும் மழை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.
கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்ததால் வால்பாறையில் உள்ள அனைத்து ஆறுகளும் வறண்டு காணப்பட்டன. வறட்சியின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வால்பாறையில் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முதல் வால்பாறைக்குட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வால்பாறை சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் மட்டுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள சோலையாறு, சின்னக்கல்லார், நீரார் உள்ளிட்ட அணைகள் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.