குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்தார் என அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் நீதி போராட்டம் என்பது சாத்தியமில்லாதது என இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவ்வை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கவேண்டும் எனவும் அடுத்த உத்தரவு வரும் வரையில் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு உத்தவிட்டது.

இதுதொடர்பாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசுகையில், குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி என கூறிஉள்ளார். வெங்கையா நாயுடு பேசுகையில், இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பாகிஸ்தானின் பொய்யானது நிராகரிக்கப்பட்டது, இது பாகிஸ்தானுக்கு சரியான மூக்குடைப்பு.

சர்வதேச மையத்தில் பாகிஸ்தானின் நிலையானது வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நாடுமே மகிழ்ச்சியில் உள்ளது. அவர்கள் கொண்டாடி வருகிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...