உதகையில் நடைபெறவுள்ள 121 வது மலர் கண்காட்சியை துவக்கி வைக்க, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவும் இத்தருனத்தில் மழை நீரை சேமிக்கும் வகையில் முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 1519 ஏரிகளில் குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. மேலும், 300 கோடி ரூபாய் திட்டத்தில் 2220 ஏரிகள் தூர்வார அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
அடுத்த வாரத்திலேயே மேட்டூர் அணை தூர்வாரப்படும். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் மழைநீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயிர் காப்பீடு திட்டம் மூலம் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குடி நீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் வறட்சி நிவாரண நிதி வழங்கும் பட்டியலில், விடுபட்ட விவசாயிகளுக்கு நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுதப்பட்டுள்ளது'' என்றார்.
இதைத்தொடர்ந்து, இரு அணிகள் இணைவது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு , பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றார். பின்னர் சாலை மார்கமாக மலர் கண்காட்சி விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை புறப்பட்டார்.
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவும் இத்தருனத்தில் மழை நீரை சேமிக்கும் வகையில் முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 1519 ஏரிகளில் குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. மேலும், 300 கோடி ரூபாய் திட்டத்தில் 2220 ஏரிகள் தூர்வார அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
அடுத்த வாரத்திலேயே மேட்டூர் அணை தூர்வாரப்படும். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் மழைநீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயிர் காப்பீடு திட்டம் மூலம் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குடி நீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் வறட்சி நிவாரண நிதி வழங்கும் பட்டியலில், விடுபட்ட விவசாயிகளுக்கு நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுதப்பட்டுள்ளது'' என்றார்.
இதைத்தொடர்ந்து, இரு அணிகள் இணைவது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு , பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றார். பின்னர் சாலை மார்கமாக மலர் கண்காட்சி விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை புறப்பட்டார்.