12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 180-க்கும் மேற்பட்ட கட்-ஆப் பெற்று பொறியியல் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது சிம்ப்ளிசிட்டி மற்றும் எஜுதர்மா இணைந்து செயலாற்றி வருகின்றன.
இதில், 180-க்கும் மேற்பட்ட கட்-ஆப் பெற்றுள்ள மாணவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி கல்லூரி தேர்வின் போது தரவரிசையில் 7.0 பெற்றவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் சேர ஊக்கப்படுத்துவது உள்ளிட்டவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிம்ப்ளிசிட்டி செயலி, தற்போதைய நிலவரம், உள்ளூர் செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, அரசு அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, ரேடியோ உள்ளிட்டவற்றை மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிந்து பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது.
எஜுதர்மா (www.edudharma.org) என்பது ஒரு இணையதளப்பக்கமாக செயல்பட்டு வருவதாகும். எஜுதர்மா, தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வியினை தொடர, விளையாட்டு மற்றும் பிற புதுமையான திட்டங்களைத் தொடர ஒரு அடித்தளமாக இருந்து செயல்பட்டு வருகிறது. இவை ஒரு குழுவாக செயல்பட்டு மாணவர்களுக்கான நிதியைத் திரட்டி அதன் மூலம் அவர்களுக்கு உதவிவருகிறது.
இதுகுறித்து மேலும் தகவலறிய, மற்றும் இதன் மூலம் பயனடைய 0422-4500445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது [email protected] என்னும் இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.