பொறியியல் மாணவர்களை ஊக்குவிக்கும் சிம்ப்ளிசிட்டி மற்றும் எஜுதர்மா


12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 180-க்கும் மேற்பட்ட கட்-ஆப் பெற்று பொறியியல் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது சிம்ப்ளிசிட்டி மற்றும் எஜுதர்மா இணைந்து செயலாற்றி வருகின்றன. 

இதில், 180-க்கும் மேற்பட்ட கட்-ஆப் பெற்றுள்ள மாணவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி கல்லூரி தேர்வின் போது தரவரிசையில் 7.0 பெற்றவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் சேர ஊக்கப்படுத்துவது உள்ளிட்டவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிம்ப்ளிசிட்டி செயலி, தற்போதைய நிலவரம், உள்ளூர் செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, அரசு அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, ரேடியோ உள்ளிட்டவற்றை மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிந்து பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது.

எஜுதர்மா (www.edudharma.org) என்பது ஒரு இணையதளப்பக்கமாக செயல்பட்டு வருவதாகும். எஜுதர்மா, தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வியினை தொடர, விளையாட்டு மற்றும் பிற புதுமையான திட்டங்களைத் தொடர ஒரு அடித்தளமாக இருந்து செயல்பட்டு வருகிறது. இவை ஒரு குழுவாக செயல்பட்டு மாணவர்களுக்கான நிதியைத் திரட்டி அதன் மூலம் அவர்களுக்கு உதவிவருகிறது.

இதுகுறித்து மேலும் தகவலறிய, மற்றும் இதன் மூலம் பயனடைய 0422-4500445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது [email protected] என்னும் இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...