பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது -மாநிலங்களவை எம்.பி. கனிமொழி பேச்சு.


பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்துவிட பாஜக முயல்கிறது எனவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.



அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுக்க கூட தமிழக அரசிற்கு தைரியமில்லை எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன் குனிந்து நடந்த அதிமுக அமைச்சர்கள், தற்போது டெல்லிக்கு முன் குனிந்து நடக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை எனவும், இந்தி திணிப்பை தான் எதிர்ப்பதாகவும் சுட்டிகாட்டிய அவர், மைல்கல், மத்திய அரசு அலுவலகங்கள், டிவிட்டர் என அனைத்து இடங்களிலும் இந்தியை நுழைப்பதில் மட்டுமே மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்தி தேசிய மொழி இல்லை எனவும், 22 ஆட்சி மொழிகளில் ஒன்று தான் இந்தி எனவும் கூறிய அவர், இந்தி திணிக்கப்பட்டால் மற்றுமொரு மெரினா போராட்டத்திற்கு மாணவர்கள் தயாராகி கொள்ளுங்கள் என தெரிவித்தார். இந்தி கற்றுக்கொள்ளவில்லை எனில் நான் தேசத்துரோகி என்றால், தேச துரோகியாக இருக்கவே பெருமைபடுகிறேன் என கனிமொழி தெரிவித்தார்.

தலைகீழாக நின்றாலும் பாஜக தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்து விட பாஜக முயல்கிறது எனவும் குற்றம்சாட்டிய அவர்,  இந்தி திணிக்கப்பட்டால் மாணவர்கள் ஒன்றுபட்டு நின்று எதிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...