சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் கடையை அடைத்து நொறுக்கிய மார்க்சிஸ்ட் கட்சியினர்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றதும், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் மட்டும் வெளியூர் மக்கள் வந்து செல்வர். 



இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி உத்தரவிட்டது. இதில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தின் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையும் அடங்கும். 



அதன்படி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இருப்பினும், அந்த டாஸ்மாக் கடையில் கள்ளத்தனமாக தினமும் மது விற்பனை தொடர்ந்துகொண்டே வந்தது. 



இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சிங்காநல்லூர் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் அளித்து வந்தனர். எனினும் அரசு அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து இன்று காலை 11.30 மணியளவில் சிங்காநல்லூர் டாஸ்மாக் கடையினையும் அங்கிருந்த மதுபாட்டில்களையும் அடித்து நொறுக்கினர்.



இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிங்காநல்லூர் காவல்நிலையத்தின் அருகிலேயே இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தமிழக காவல்துறை டாஸ்மாக் கடைகளுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, டாஸ்மாக் கடை நிர்வாகத்தை தன்னிச்சையாக செயல்பட அனுமதித்ததே இதற்குக் காரணம். இந்த கடை நடத்த இடமளித்த கட்டிட உரிமையாளர் மீதும், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...