தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அவசர பராமரிப்பு பணிகள் இன்று (மே 19) மேற்கொள்ளப்பட்டு வருவதால் இக்குடிநீர் திட்டத்தில் இயங்கும் 4 பிரதான மின் மோட்டார்களில் 3 பிரதான மின் மோட்டார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோவை மாநகராட்சி, பல்லடம் நகராட்சி, 14 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று காலை 6 மணி முதல் ஒரு நாள் குடிநிர் விநியோகம் நிறுத்தப்படும்.
பணிகள் முடிக்கப்பட்டு இன்று நள்ளிரவு முதல் குடிநீர் விநியோகம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, உள்ளாட்சி அமைப்புகளும், பொது மக்களும் தங்கள் உள்ளூர் நிராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கோவை, பில்லூர் பராமரிப்புக் கோட்டம் நிர்வாகப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோவை மாநகராட்சி, பல்லடம் நகராட்சி, 14 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று காலை 6 மணி முதல் ஒரு நாள் குடிநிர் விநியோகம் நிறுத்தப்படும்.
பணிகள் முடிக்கப்பட்டு இன்று நள்ளிரவு முதல் குடிநீர் விநியோகம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, உள்ளாட்சி அமைப்புகளும், பொது மக்களும் தங்கள் உள்ளூர் நிராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கோவை, பில்லூர் பராமரிப்புக் கோட்டம் நிர்வாகப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.