10-ஆம் வகுப்பு தேர்வில் கோவையில் 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி- முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி


கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 96.42 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 41 ஆயிரத்து 649 மாணவ, மாணவியர்களில் 40 ஆயிரத்து 156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 511 மாணவர்களில் 19 ஆயிரத்து 447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் தேர்ச்சி விகிதம் 94.81 சதவிகிதமாக உள்ளது. மேலும், தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 138 மாணவிகளில் 20 ஆயிரத்து 709 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களது தேர்ச்சி சதவிகிதம் 97.79 ஆக உள்ளது. 

கோவை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.42 சதவிகிதம், இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 519 பள்ளிகளில் 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது" என கணேசமூர்த்தி தெரிவித்தார்.

முன்னதாக, மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 11 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...