கோவில் வரும் பக்தர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை கோரி பாரத் சேனா அமைப்பினர் இன்று புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாரத் சேனா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலச் பொதுச் செயலாளர் உங்கள் சிவா உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசிதிபெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடவும் திதி கொடுக்கவும் வரும் பக்தர்களை ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து இச்செயலை தடுத்து நிறுத்தவில்லை எனில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக பாரத் சேனாவின் தொண்டர்கள் நிறுத்தப்படுவார்கள்.
கோவில் நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பக்தர்களையும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி பாரத் சேனா சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாரத் சேனா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலச் பொதுச் செயலாளர் உங்கள் சிவா உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசிதிபெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடவும் திதி கொடுக்கவும் வரும் பக்தர்களை ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து இச்செயலை தடுத்து நிறுத்தவில்லை எனில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக பாரத் சேனாவின் தொண்டர்கள் நிறுத்தப்படுவார்கள்.
கோவில் நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பக்தர்களையும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி பாரத் சேனா சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.