கோவில் வரும் பக்தர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை கோரி பாரத் சேனா புகார்

கோவில் வரும் பக்தர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை கோரி பாரத் சேனா அமைப்பினர் இன்று புகார் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து பாரத் சேனா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலச் பொதுச் செயலாளர் உங்கள் சிவா உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசிதிபெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடவும் திதி கொடுக்கவும் வரும் பக்தர்களை ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து இச்செயலை தடுத்து நிறுத்தவில்லை எனில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக பாரத் சேனாவின் தொண்டர்கள் நிறுத்தப்படுவார்கள். 

கோவில் நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பக்தர்களையும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி பாரத் சேனா சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...