12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 16 நபர்களுக்கு மானியத்திட்டத்தில் கீழ் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் வளையான்குட்டை தோட்டம் ஊராட்சியில் வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விதி 110-ன் கீழ் வேளாண்பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் பல்வேறு திட்டங்கள் பெற்று பயன்பெற வேண்டுமென்ற அடிப்படையில் மானியத்துடன் கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு மையம் செயல்படும் வகையில் முன்னோடி விவசாயி தேர்வு செய்யப்பட்டு அப்பகுதி விவசயிகளுக்கு எவ்வகையான உபகரணங்கள் வழங்கினால் அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டு அதன் படி இயந்திரத்தின் மொத்த மதிப்பு ரூ.25 இலட்சத்திலிருந்து பயனாளிக்கு ரூ.10 இலட்சம் மானியம் கிடைத்திடும் வகையில் தேவையான வேளாண் இயந்திரம் வழங்கப்படுகிறது. 

அந்த வேளாண் இயந்திரத்தின் மூலம் பயனாளி தங்கள் பயன்பாட்டிற்கு போக அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருவார். இவ்வாறு வேளாண் பொறியியல் துறையின் மூலம் இப்பணியை மேற்கொள்ளும்பொழுது அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தங்கள் பகுதிகளில் விவசாய பணிகளை மேற்கொள்ள பேருதவியாக இருக்கின்றன.கடந்த ஆண்டு மட்டும் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 16 நபர்களுக்கு மானியத்திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டிராக்டர், ரோட்டா வேட்டர், ஐந்து கொத்து கலப்பை, ஒன்பது கொத்து கலப்பை, சுழல் கலப்பை, தட்டு வெட்டும் கருவி முதலியவை அடங்கும். இதன் மூலம் அந்தந்த பகுதிக்கு தேவையான உபகரணங்களை பெற்று பயன்பெறுவதே ஆகும். 

கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்பொறியியல் துறையின் மூலம் 17 மையங்களில் ரூ.1.70 கோடி மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 189 விவசாயிகளுக்கு 55.90 கோடி மானியத்தில் பவர் வீடர், தட்டு வெட்டும் கருவி, ஸ்பிரேயர், பவர் டிரில்லர், ரோட்டாவேட்டர் ஆகிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோல் வேளாண் பொறியியல் துறையின் மூலம் சூரிய ஒளி, மின் சக்தி மூலம் மோட்டார் இயங்கும் திட்டம், மின் சக்தி மூலம் உலர்த்தி அமைக்கும் திட்டம், தேசிய வளம் குன்றா வேளாண் திட்டம், ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் உபகரணங்கள் வழங்ப்படுவதுடன் மேலும்  பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா திட்டம் துவக்கப்பட்டு நடுத்தர தடுப்பணைகள் அமைத்து பயன்பெறும் வகையில் இதுவரை ரூ.50 கோடி மதிப்பில் 10 தடுப்பணைகள் அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றன. மேலும் தங்கள் பகுதியில் வேளாண் உற்பத்தியை அதிகரித்திடும் விதமாக விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்படும் மானித்திட்டத்தினை சிறப்பாக பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...