நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் - முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்


அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்.எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என தெரிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு சென்று பார்ப்பது இன்னமும் தொடர்கின்றது என குற்றம்சாட்டினார். 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஓ.பி்.எஸ் டிவிட்டர் தகவல் தவறாக பதிவிடப்பட்டது எனவும் தற்போது அந்த பதிவு சரி செய்யப்பட்டதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டில் தங்கள் அணி உறுதியாக இருப்பதாகவும், நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக பேச்சுவார்த்தை துவங்கும் எனவும் இரு அணிகள் தரப்பிலும் ஆரோக்கியமான வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது எனவும் பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், வலிமையான நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் என தெரிவித்தார். ரஜினி அரசியல் வருகை என்பது வரவேற்க வேண்டியது என கூறியவர் ரஜினி நல்ல மனிதர் எனவும் தெரிவித்தார். அதிமுகவை பா.ஜ.க நேரடியாகவே இயக்கும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா சொன்ன கருத்து தொடர்பான கேள்விக்கு, அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும், எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என்றார். 11ம் வகுப்புக்கு பொதுதேர்வு என்பது வரவேற்கதக்க நடவடிக்கை என பாராட்டியவர் அமைச்சர் செங்கோட்டையன் செய்படுத்திய கிரேடு முறை திட்டம் அருமையான திட்டம் எனவும் கடந்த 3 மாதங்களாக பள்ளிகல்வி துறை சிறப்பாக செயல்படுகின்றது எனவும் பாராட்டினார். தவறை சுட்டிகாட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிகாட்டியும் விமரசிக்க வேண்டிய நேரத்தில் விமர்சனம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்றவர் பள்ளிகளில் அம்மா கிட்ஸ் உபகரணங்களை உடனடியாக வழங்கப்பட்டால் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு இணையாக மாநில பாடதிட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...