நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கோடை காலத்தை முன்னிட்டு 121-வது மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் துவங்கப்பட்டது.
இந்த மலர் கண்காட்சியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், 150 வகைகளைச் சேர்ந்த 5 லட்சம் பூக்கள் மற்றும் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு லட்சம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை கோயில், 6 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட பறவை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மலர் கண்காட்சியை காண கண்காட்சி துவங்கப்பட்ட நாள் முதலே மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.

உதகை மலர் கண்காட்சியின் இறுதி நாளான இன்றும் தமிழகம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர்.
இதனால், உதகை, நீலகிரிக்கு உட்பட்ட பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஏராளமான காவல்துறையினர் உதகையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மலர் கண்காட்சியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், 150 வகைகளைச் சேர்ந்த 5 லட்சம் பூக்கள் மற்றும் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு லட்சம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை கோயில், 6 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட பறவை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மலர் கண்காட்சியை காண கண்காட்சி துவங்கப்பட்ட நாள் முதலே மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.

உதகை மலர் கண்காட்சியின் இறுதி நாளான இன்றும் தமிழகம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர்.
இதனால், உதகை, நீலகிரிக்கு உட்பட்ட பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஏராளமான காவல்துறையினர் உதகையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
