இஸ்லாமிய சட்டங்களே எங்களுக்கு தேவை என மகளிர் சிறப்பு நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமொழி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் ஷரீஅத் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரும்புக்கடையில் நடைபெற்றது. இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்வுக்கு எந்த வகையிலும் முரணானது இல்லை என்பதை பறைசாற்றும் வகையில் பெண்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் ஃபாத்திமா முசஃப்பர் கலந்துகொண்டு இஸ்லாம் கூறும் ஷரீஅத் சட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்.

இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக உள்ளது. தலாக், சொத்துரிமை, திருமணம் போன்ற அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ள மார்க்கம் என்பதைத் தெளிவு பட பேசினார். 



காங்கேயம் ஸ்னேஹா சொசைட்டி சர்வீஸ் அற்புத பவுல் ராணி, வழக்கறிஞர் மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தாய்மை, மேன்மை, பொறுமை, மென்மை என பல தன்மைகளைக் கொண்ட பெண்மையின் உரிமைகளையும் கடமைகளையும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் விரிவுரையாளர் ஜெசீமா சித்தீக்கியா விளக்கினார். இறைச் சட்டமே அனைத்திற்கும் தீர்வு என்ற தலைப்பில் இஸ்லாமியா பள்ளி ஆசிரியை அஸ்மாபீ தய்யிபா உரையாற்றினார். இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் தேவை குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

முன்னதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் ஃபர்சானா தலைமுறை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் இஸ்லாமிய சட்டங்களே அனைத்திற்கும் தீர்வு, அதனை பெண்களாகிய நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என அனைத்து பெண்களும் ஒரு சேர உறுதிமொழி மேற்கொண்டனர். சலீனா அனைவரையும் வரவேற்க நிகழ்ச்சி நெறியாளர் ஷக்கீலா நன்றி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...