123-சட்டமன்ற உறுப்பினர்கள், 38 அமைச்சர்கள், 48 மாவட்டச் செயலாளர்கள், 98 சதவிகித தொண்டர்களின் பலம் தங்களிடம் உள்ளதாகவும், ஜெயலலிதாவிற்கு மேலே உள்ளதாக சிலர் நினைத்துக்கொண்டு இருப்பதாகவும், ஆனால் தரைமட்டத்தில் என்ன நிலவரம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என ஓ.பி.எஸ். அணிக்கு சூசகமாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-
ஓ.பி.எஸ், பொன்னையன், பி.எச்.பாண்டியன், முனிசாமி ஆகியோர் இணைந்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான் என்னை பொருளாளராக நியமித்துள்ளார். சசிகலா பொதுச்செயலாளர் என்ற கடித்தத்தை பார்த்து வங்கி அனுமதி கொடுத்ததன் அடிப்படையிலேயே தற்போது சட்டப்படி, முறைப்படி செயல்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவால் 7 ஆண்டுகள் பொருளாளராக தான் இருந்தேன். முதலமைச்சராக இருக்கும்போது மகிழ்சியாக இருந்த ஓ.பி.எஸ்., சசிகலா முதலமைச்சராக வரலாம் என்று சொல்லும்போது விலகி விட்டார்.
தமிழக நிர்வாகம் குறித்த ரஜினிகாந்த்-தின் பேச்சிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தான் என்னுடைய கருத்தும். இணைப்பு வேண்டும் என்று சொல்லும் முதல் ஆளான நான் எதுவும் தவறாக பேசாத நிலையில், என்னை ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களையும், வன விலங்குகளையும் இரு கண்களாக பாவிக்கும் அரசு அதிமுக. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவு வன விலங்குகள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் வன அலுவலர்கள் வன சூழலில் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.
கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-
ஓ.பி.எஸ், பொன்னையன், பி.எச்.பாண்டியன், முனிசாமி ஆகியோர் இணைந்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான் என்னை பொருளாளராக நியமித்துள்ளார். சசிகலா பொதுச்செயலாளர் என்ற கடித்தத்தை பார்த்து வங்கி அனுமதி கொடுத்ததன் அடிப்படையிலேயே தற்போது சட்டப்படி, முறைப்படி செயல்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவால் 7 ஆண்டுகள் பொருளாளராக தான் இருந்தேன். முதலமைச்சராக இருக்கும்போது மகிழ்சியாக இருந்த ஓ.பி.எஸ்., சசிகலா முதலமைச்சராக வரலாம் என்று சொல்லும்போது விலகி விட்டார்.
தமிழக நிர்வாகம் குறித்த ரஜினிகாந்த்-தின் பேச்சிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தான் என்னுடைய கருத்தும். இணைப்பு வேண்டும் என்று சொல்லும் முதல் ஆளான நான் எதுவும் தவறாக பேசாத நிலையில், என்னை ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களையும், வன விலங்குகளையும் இரு கண்களாக பாவிக்கும் அரசு அதிமுக. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவு வன விலங்குகள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் வன அலுவலர்கள் வன சூழலில் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.