சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் 900 கிராம் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், இன்று அதிகாலை 4 மணியளவில் கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஆசனவாய்க்குள் 900ம் கிராம் தங்கக்கட்டிகள் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.