கோவை உக்கடம் குளத்தில் மூழ்கி தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் குளத்தில், நேற்று (ஞாயிறு) மாலை கல்லூரி மாணவர் ஒருவர் குளத்தில் நடந்து சென்று மூழ்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அங்கு இருந்த மீனவர்கள் சிலர் அவரை தடுத்து குளக்கரையில் விட்டு உள்ளனர்.
இந்நிலையில் மீனவர்கள் சென்ற பின்னர் அந்த மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து இன்று காலை உக்கடம் குளத்தில் சடலமாக உடல் ஒன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த தனுஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்தவரை, மீனவர்கள் காப்பாற்றிய போதும், மீண்டும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதனிடையே, அந்த மாணவர் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளதாக அவரது பெற்றோர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, மாணவரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் குளத்தில், நேற்று (ஞாயிறு) மாலை கல்லூரி மாணவர் ஒருவர் குளத்தில் நடந்து சென்று மூழ்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அங்கு இருந்த மீனவர்கள் சிலர் அவரை தடுத்து குளக்கரையில் விட்டு உள்ளனர்.
இந்நிலையில் மீனவர்கள் சென்ற பின்னர் அந்த மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து இன்று காலை உக்கடம் குளத்தில் சடலமாக உடல் ஒன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த தனுஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்தவரை, மீனவர்கள் காப்பாற்றிய போதும், மீண்டும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதனிடையே, அந்த மாணவர் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளதாக அவரது பெற்றோர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, மாணவரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.