உக்கடம் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவை உக்கடம் குளத்தில் மூழ்கி தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் குளத்தில், நேற்று (ஞாயிறு) மாலை கல்லூரி மாணவர் ஒருவர் குளத்தில் நடந்து சென்று மூழ்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அங்கு இருந்த மீனவர்கள் சிலர் அவரை தடுத்து குளக்கரையில் விட்டு உள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் சென்ற பின்னர் அந்த மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இன்று காலை உக்கடம் குளத்தில் சடலமாக உடல் ஒன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த தனுஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது.

நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்தவரை, மீனவர்கள் காப்பாற்றிய போதும், மீண்டும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனிடையே, அந்த மாணவர் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளதாக அவரது பெற்றோர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மாணவரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...