கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கழிவுகளை ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாய நிலங்களில் விடுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள பயனியர் பெர்டிலைசர்ஸ் உரம் தயாரிக்கும் நிறுவனம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால், அருகம்பாளையம், ராசிபாளையம் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதேபோல ராசிபாளையம், முத்துகவுண்டன் புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுகிரகா வால்வ்ஸ், ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸ், பயனியர் பிளைவுட் கம்பெனி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கழிவுகளை விவசாய நிலங்களில் விடும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தனியார் நிறுவனங்கள் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உப்பு கலந்த நீரை கால்நடைகளுக்கு குடிக்கக் கூட கொடுக்க முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயம் பாழ்பட்டு வருவதால் விவசாயிகள் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், இந்த நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள பயனியர் பெர்டிலைசர்ஸ் உரம் தயாரிக்கும் நிறுவனம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால், அருகம்பாளையம், ராசிபாளையம் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதேபோல ராசிபாளையம், முத்துகவுண்டன் புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுகிரகா வால்வ்ஸ், ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸ், பயனியர் பிளைவுட் கம்பெனி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கழிவுகளை விவசாய நிலங்களில் விடும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தனியார் நிறுவனங்கள் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உப்பு கலந்த நீரை கால்நடைகளுக்கு குடிக்கக் கூட கொடுக்க முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயம் பாழ்பட்டு வருவதால் விவசாயிகள் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், இந்த நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.