விவசாய நிலத்தில் கழிவுகளை சேர்க்கும் தனியார் நிறுவனங்களைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கழிவுகளை ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாய நிலங்களில் விடுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். 



கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள பயனியர் பெர்டிலைசர்ஸ் உரம் தயாரிக்கும் நிறுவனம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால், அருகம்பாளையம், ராசிபாளையம் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல ராசிபாளையம், முத்துகவுண்டன் புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுகிரகா வால்வ்ஸ், ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸ், பயனியர் பிளைவுட் கம்பெனி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கழிவுகளை விவசாய நிலங்களில் விடும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தனியார் நிறுவனங்கள் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உப்பு கலந்த நீரை கால்நடைகளுக்கு குடிக்கக் கூட கொடுக்க முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயம் பாழ்பட்டு வருவதால் விவசாயிகள் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், இந்த நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...