சவுரிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கோவை சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் வாயில் கருப்பு தூணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை சவுரிபாளையம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வேறு பகுதியில் மூடப்பட்ட 2 மதுக்கடைகள் சவுரிபாளையத்தில் அருகருகே திறக்கப்பட்டன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 4 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, சவுரிபாளையம் பகுதி பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அப்போது, சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானக்கடைகள் இல்லாத நிலையில், குடியிருப்பு, பள்ளிகள் நிறைந்த பகுதியில் 4 மதுபானக்கடைகள் இயங்கி வருவதால் மற்ற பகுதியில் இருந்து மது குடிக்க வருபவர்கள் திறந்தவெளியில் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இப்பகுதியில் 4 மதுபானக்கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த சனிக்கிழமை இரு கோஷ்டி மோதல் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டார். மதுபான கடைகளினால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறினர். 

மாவட்ட நிர்வாகம் உடனடியாக சவுரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால்  போராட்டங்களில் ஈடுபட உளளதாக தெரிவித்தனர்.

இதேபோல் சொக்கன்புதூர் பகுதியில் திமுக கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர், மதுபான கடை அமைக்க கடை கட்டி வாடகைக்கு கொடுதுள்ளதாகவும் இங்கு கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அமையும். எனவே மதுபான கடை அமைவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...