கோவை சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் வாயில் கருப்பு தூணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை சவுரிபாளையம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வேறு பகுதியில் மூடப்பட்ட 2 மதுக்கடைகள் சவுரிபாளையத்தில் அருகருகே திறக்கப்பட்டன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 4 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, சவுரிபாளையம் பகுதி பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அப்போது, சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானக்கடைகள் இல்லாத நிலையில், குடியிருப்பு, பள்ளிகள் நிறைந்த பகுதியில் 4 மதுபானக்கடைகள் இயங்கி வருவதால் மற்ற பகுதியில் இருந்து மது குடிக்க வருபவர்கள் திறந்தவெளியில் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இப்பகுதியில் 4 மதுபானக்கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த சனிக்கிழமை இரு கோஷ்டி மோதல் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டார். மதுபான கடைகளினால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறினர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக சவுரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்களில் ஈடுபட உளளதாக தெரிவித்தனர்.
இதேபோல் சொக்கன்புதூர் பகுதியில் திமுக கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர், மதுபான கடை அமைக்க கடை கட்டி வாடகைக்கு கொடுதுள்ளதாகவும் இங்கு கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அமையும். எனவே மதுபான கடை அமைவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் மனு அளித்தனர்.

கோவை சவுரிபாளையம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வேறு பகுதியில் மூடப்பட்ட 2 மதுக்கடைகள் சவுரிபாளையத்தில் அருகருகே திறக்கப்பட்டன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 4 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, சவுரிபாளையம் பகுதி பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அப்போது, சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானக்கடைகள் இல்லாத நிலையில், குடியிருப்பு, பள்ளிகள் நிறைந்த பகுதியில் 4 மதுபானக்கடைகள் இயங்கி வருவதால் மற்ற பகுதியில் இருந்து மது குடிக்க வருபவர்கள் திறந்தவெளியில் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இப்பகுதியில் 4 மதுபானக்கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த சனிக்கிழமை இரு கோஷ்டி மோதல் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டார். மதுபான கடைகளினால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறினர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக சவுரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்களில் ஈடுபட உளளதாக தெரிவித்தனர்.
இதேபோல் சொக்கன்புதூர் பகுதியில் திமுக கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர், மதுபான கடை அமைக்க கடை கட்டி வாடகைக்கு கொடுதுள்ளதாகவும் இங்கு கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அமையும். எனவே மதுபான கடை அமைவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் மனு அளித்தனர்.