கோவையில் தனியார் பள்ளிகளில் இடஒதுக்கிடு முறை பின்பற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்ட துணை ஆட்சியரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரியுமான மோகன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை- திருச்சி சாலையில் உள்ள புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்தும், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மோகன் தெரிவித்தார். மேலும், இந்த ஆய்வு தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...