கோவையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்ட துணை ஆட்சியரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரியுமான மோகன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை- திருச்சி சாலையில் உள்ள புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்தும், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மோகன் தெரிவித்தார். மேலும், இந்த ஆய்வு தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தெரிவித்தார்.
கோவை மாவட்ட துணை ஆட்சியரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரியுமான மோகன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை- திருச்சி சாலையில் உள்ள புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்தும், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மோகன் தெரிவித்தார். மேலும், இந்த ஆய்வு தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தெரிவித்தார்.