ஸ்வச் பாரத் திட்டத்தில் இணைந்து கோவை மாநகரத்தை சுத்தப்படுத்த மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதன் மூலம் கோவை மாநகராட்சி 100 மாணவர்களுக்கு ஸ்வாஷ் பாரத் திட்டத்தின் பயிற்சிகளை கற்க வாய்ப்பினை வழங்குகிறது. மாணவர்களை இத்திட்டத்தில் இணைப்பதின் மூலம் பள்ளி பருவம் முதலே மாணவர்களுக்கு தூய்மை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச் பாரத் திட்டத்தில் செயல்படும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
இதில் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் https://goo.gl/forms/IiFtiTMFuqTgAtkA2 என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.