மீண்டும் கழிவு நீரால் தேங்கிய கிக்கானி மேம்பாலம் மாநகராட்சி புதிய முயற்சி மேற்கொள்ளுமா?

கோவையில் மழை பெய்தால் மட்டுமே கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கும். ஆனால் சாக்கடை கழிவு நீரால் தரைபாலம் முழுவது நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இந்த பாலத்தின் அருகே உள்ள பாதாள சாக்கடைக் குழாயில் தொடர்ந்து ஒரு மாதமாக தினமும் கழிவுநீர் உடைப்பெடுத்து வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது பொங்கிப் பெருகும் கழிவுநீர், பாலத்தில் அடியில் தேங்கி வாகனங்களை மூழ்கடித்து வருகிறது. அங்குள்ள மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நிரந்தரமான தீர்வுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இதன் விளைவு, முன்தினம் ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் வழக்கம்போல பாதாளச் சாக்கடை குழாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர், மேல்பக்க மூடியை திறந்து கொண்டு பெருக்கெடுத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ரயில்வே பாலம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. காலை 11 மணியளவில் பாலம் முழுவதும் கழிவுநீரால் மூழ்கியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. பிரச்சினை அதிகமாகிவிட்டதால், உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் குழாய் உடைப்பை சரிசெய்வார்கள் என மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் மாநகராட்சி தரப்பில் இருந்து யாரும் வராததால் வேறு வழியின்றி போலீஸார் அந்த சாலையை அடைத்தனர். 



பின்னர், ஞாயிறு அன்று மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் சரிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று கோவையில் பொய்த மழையால் காலையில் மழைநீர் அப்பகுதியில் தேங்கியது. 11 மணியளவில் மீண்டும் அந்த சாக்கடை கழிவு நீர் வெளிவர ஆரம்பித்தது. மீண்டும் சுகாதார அலுவலர்களால் மோட்டர் மூலம் கழிவு நீரை உறிஞ்சி அப்புறப்படுத்தினர். பாதாள சாக்கடைக் குழாய் அடைப்பை சரி செய்வதோடு, ரயில்வே பாலத்தின் கீழே மழைநீர் வடிகால் அமைத்தால் மட்டுமே இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.



இது குறித்து மேற்கு மண்டல சுகாதார அலுவலரிடம் தொடர்பு கொண்டபோது; ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது அருகில் உள்ள பகுதிகளில் உள்ள மண் மற்றும் குப்பை இந்த பலத்திற்கு செல்வதால் மழைநீர் வடிகாலில் மண் தேங்கி நிற்கின்றது. இதனால் மழைநீர் இப்பகுதியில் தேக்கம் ஏற்படுகிறது. பலத்தின் இந்த வேலைக்கான பணிகள் மேற்கொள்ள ரயில்வே துறையிடம் அனுமதி கோரவேண்டும். இல்லையென்றால், தற்போது பயன்படுத்தப்படும் மோட்டர் மூலம் மட்டுமே மழைநீரை வெளியேற்ற முடியும். புதிய முயற்சியாக தற்போது லங்கர் கார்னர் பாலத்தில் மழைநீர் வடிகால் வேலை நடைபெறுவதை போல் இங்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...