நகர்ப்பகுதியை விட்டு, இடம் பெயர்ந்து செல்ல, சிஎம்சி காலனி துப்புரவு தொழிலாளர்கள் தயக்கம்

சி.எம்.சி., காலனிக்கு பின்புறம், சிட்டி மாநகராட்சி பள்ளிக்கான மைதானம் உள்ளது. அதன் ஓரத்தை ஆக்கிரமித்து, 400 குடும்பங்கள் ஓட்டு வீடு அமைத்து, குடியிருக்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை வைத்துள்ளனர். இப்பகுதிக்கு பிரத்யேகமாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. உப்புத்தண்ணீர் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் இல்லாததால், வீட்டுக்கு முன் கழிவு நீர் தேங்கியுள்ளது. மின் வசதி இல்லாததால், அருகில் உள்ள சி.எம்.சி., காலனியில் தற்காலிக இணைப்பு பெற்று, தற்போது பயன்படுத்துகின்றனர். 



இப்பகுதியினர், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனை சந்தித்து, 'மின் இணைப்பு பெற்றுத்தர வேண்டும்; புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும்' எனக்கோரி மனு கொடுத்தனர். அதன்பிறகு ரூபாய் 377 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில்; 'சி.எம்.சி., காலனி மைதானத்தில், 30 ஆண்டுகளாக வசிக்கிறோம். போதிய அடிப்படை வசதியில்லை. காலனியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துகிறோம். மின் இணைப்பு இல்லாததால், குழந்தைகள் கல்வி பாதிக்கிறது. புதிதாக குடியிருப்பு கட்டிக்கொடுக்க வேண்டும்' என மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை' என்றும் மாறாக, வெள்ளலூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் இடம் பெயருமாறும் கூறினார். 

இங்கு வசிக்கும் பெரும்பாலனோர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அதிகாலை 5 மணியளவில் பணிக்கு செல்லவேண்டும். இதனால் வெள்ளலூர் பகுதியில் இருந்து வர பேருந்து வசதி கிடையாது. மேலும் பல்வேறு இடங்களுக்கு இங்கு உள்ளவர்கள் பணிக்கு செல்ல வேண்டும். எனவே கோவை மாநகரில் தூய்மை பணியாளர்களுக்கு சிஎம்சி காலனி மைதானத்தில் குடியிருப்புகளை அமைத்து தருமாறு வேண்டுகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பொது கழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகள் கட்டவும், சி.எம்.சி., காலனி குடியிருப்பை செப்பனிட மதிப்பீடு தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை. நகர்ப்பகுதியை விட்டு, அங்கு இடம் பெயர்ந்து செல்ல, துப்புரவு தொழிலாளர்கள் தயங்குகின்றனர், என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...