நுற்புழுக்களின் எண்ணிக்கையும் பொருளாதார சேத நிலை

தாவர நூற்புழுக்கள் மண் துகள்களுக்கு இடையே இருந்து கொண்டு தாவரத்தின் வேர்களில் இருந்து சாற்றை உறிஞ்சி உண்டு வாழ்வன. சாகுபடி நடைபெறாக் காலங்களில் இவை பிற சார் தாவரங்களான களைச் செடிகளின் வேர்களைச் சார்ந்தோ, உறக்க நிலைக்குச் சென்றோ தம் வாழ்க்கைச் சுழற்சியினைத் தொடர்கின்றன. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறைப் பேராசிரியர்கள் மா.சிவக்குமார் மற்றும் துறைத்தலைவர் ச. சுப்ரமணியன் ஆகியோர் கூறியதாவது:-

நூற்புழுக்களின் எண்ணிக்கையும் நூற்புழு இனங்களும் மகசூல் இழப்பினை நிர்ணயிக்கும் காரணியாகும். சாதாரணமாக ஒரு மி.லி மண்ணில் ஒரு நூற்புழுவுக்கு மேல் இருந்தால் பொருளாதார சேத நிலை ஏற்படும். ஆனால் வேரழுகல் நூற்புழு மற்றும் துளைப்பான் நூற்புழுக்கள் இந்த அளவினை விடக் குறைவாக இருந்தாலே பொருளாதார சேத நிலை ஏற்படும்.

தாவர நூற்புழுக்களைப் பொறுத்த அளவில் பெண் நூற்புழுக்களே பயிரைத் தாக்கிச் சேதம் விளைவிக்கக் கூடியவை. ஆண்புழுக்கள் பயிர்களைத் தாக்காது. மேலும் நூற்புழுக்களுக்கு ஊட்ட ஆதாரம் அதிகம் உள்ளபோது அதிகப் பெண்புழுக்கள் உருவாகும். ஊட்ட ஆதாரம் அதிகம் இல்லாத நிலையில் அதிக அளவு ஆண்புழுக்களும் குறைந்த அளவு பெண் புழுக்களும் உருவாகும் ஒரு நிலை தாவர நூற்புழுக்களுக்கு உண்டு. இதன் காரணமாகவே மண்ணில் உள்ள குறைந்த அளவு பெண் புழுக்கள் தம் வாழ்க்கைச் சுழற்சியைத் தொடர்கின்றன.

தாவர நூற்புழுக்களின் எண்ணிக்கை காரிப், ரபி ஆகிய பயிர்க்காலங்களில் அதிகமாகவும் கோடை காலங்களில் குறைந்தும் காணப்படும்.

நூற்புழுக்களுக்கு ஊட்டம் அளிக்கும் சார்தாவரங்களின் தரம், மண் அமைப்பு, மண் வெப்பநிலை, மண்ணில் உள்ள அங்ககப் பொருட்களின் ஆகியன நூற்புழுக்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் காரணியாகும்.

மண்ணில் உள்ள நூற்புழுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:-

மண்ணில் தொழு (வ) உரம் பிண்ணாக்கு வகைகள், கோழிஉரம், கரும்பாலைக் கழிவு, பசுந்தாள் உரம் போன்ற அங்கக இடுபொருட்களை அதிக அளவு இட்டு, மண்ணின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள தாவர நூற்புழுக்களைக் குறைக்கலாம். இவை கீழ்க்கண்ட வழிகளில் செயல்பட்டு நூற்புழுக்களைக் குறைக்கின்றன.

  • அங்ககப் பொருட்கள் மண்ணில் மட்கும் போது அபரிமிதமான வெப்பம் வெளிப்படுகின்றது. நூற்புழுக்களை அழிக்க இவ்வெப்பம் போதுமானது.
  • மண்ணில் இடும் உரப்பொருட்கள் மட்கும்போது ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் அங்கக அமிலம் போன்ற சில உபப்பொருட்கள் வெளியாகின்றது. இவை நூற்புழுக்களை அழிக்கின்றன.
  • வளர்சிதை மாற்றத்தின்போது வெளியாகும் உபப்பொருட்கள் மண்ணில் உள்ள நூற்புழு எதிரி உயிரினங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
  • வேப்பம் பிண்ணாக்கு போன்ற சில அங்ககப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் இயற்கையாகவே நூற்புழுக்களைக் கொல்லும் தன்மை கொண்டவை.
  • அங்கக இடுபொருட்கள் மண்ணின் தன்மையை மேம்படுத்தி பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதன் காரணமாக தாவரத்தின் நூற்புழு எதிர்ப்புத்திறன் அதிகரிக்கின்றது.
  • மண் வளப் பாதுகாப்பிற்கு அங்கக இடுபொருட்களை அதிகமாக இடுவது நல்லது. இவை நூற்புழு எதிரி உயிரினங்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நூற்புழு மேலாண்மைக்கு வழிவகை செய்கின்றன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...