தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 2 (ஏ) தேர்வு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியன்று நடைபெற உள்ளது. இப்போட்டித் தேர்வுக்கு குறைந்தபட்ச படிப்பாக ஏதாவது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. இந்த போட்டி தேர்வுக்கு வரும் மே 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த மாற்றுத் திறனாளி மனுதாரர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக சிறப்பாக தனி வகுப்புகள் ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து தேர்வு வரை சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகுப்பில் சேர டிஎன்பிஎஸ்சி குரூப் 2 (ஏ) தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மே 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி அரசு பணியில் சேர்ந்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரித்துள்ளார்.
இந்த எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த மாற்றுத் திறனாளி மனுதாரர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக சிறப்பாக தனி வகுப்புகள் ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து தேர்வு வரை சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகுப்பில் சேர டிஎன்பிஎஸ்சி குரூப் 2 (ஏ) தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மே 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி அரசு பணியில் சேர்ந்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரித்துள்ளார்.