தஞ்சாவூரை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டு பேர் இன்று காலை காரின் மூலம் உதகைக்கு சென்றுள்ளனர். உதகையிலிருந்து கேத்தி பாலடா நோக்கி இரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், இவர்களின் காரின் முன்பு சிறுத்தை ஒன்று ஓடியுள்ளது.

இதனைக் கண்டு ஓட்டுநர் அச்சமடைந்த நிலையில் நிலைதடுமாறிய கார் பாலத்திலிருந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிக்கிய இருவரும் உயிர்தப்பினர்.
